Wednesday, 1 June 2016

கீச்சுக்கள்!

நம்மை நேசிப்பவர்களுக்குப் புன்னகையையும்,
நம்மை வெறுப்பவர்களுக்கும்
விலகி நிற்பவர்களுக்கும் இன்னும் கொஞ்சம் அதிகப் புன்னகையையும்
அளிப்பதுதான் வாழ்க்கையில் வாழ்தலுக்கான சாரம்!

வெளிப்படுத்தாத அன்பையே பிறகு அஞ்சலி என்பார்!


Learning a lesson from an experience could be a fate, but ending up with similar lessons repeatedly is called attitude!
அனுபவத்தில் கற்கும் ஒரு பாடத்திற்குக் காரணம் விதியாய் இருக்கலாம், அதே பாடத்தை பல முறை கற்கும்படி நேர்ந்தால் அதற்கு முட்டாள்தனமான நம் நடத்தையே காரணம்!


இயலாமை, அறியாமை, போதாமை, பேதைமை, கொடுமை, வறுமை....இவையனைத்தையும் போக்கிடுமா மே 16 இல் கை விரலில் வைக்கும் "மை" ???


அலட்சியமும் அவமரியாதையும் அன்பைக் கொல்லும் பேராயுதங்கள்!

அன்பை வெளிப்படுத்தும் சிறிய மெனக்கெடல் கூட இல்லாத எந்த நட்பும் உறவும் நீடிப்பதில்லை!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...