Wednesday 1 June 2016

சுயம்‬

கருணை என்பது அடித்து
பிடுங்குவதல்ல
அது தானாய் வர
வேண்டியது!

காதல் என்பது கசக்கி
முகர்வதல்ல
அது இயல்பாய் மலர
வேண்டியது!

துரோகம் என்பது மன்னிக்க
முடிவதல்ல
அது நினைவுகளாய் உதிர
வேண்டியது!

வாழ்க்கை என்பது நடிக்க
முடிவதல்ல
அது சுயமாய் நிமிர
வேண்டியது!

எது எதுவென இருப்பதும்
அதுவல்லவே
இது இதுவென தேடுவதும்
எளிதில் கிடைப்பதல்லவே!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!