Wednesday 19 March 2014

வெறுமை

பூவியீர்ப்பு நிறுத்தவில்லை
வலிகொஞ்சமும் உணரவில்லை
கரம்பற்றிக் கொண்டிருந்தாய்
இவ்வழியின் பயணமெங்கும்

பாதையின் திருப்பத்தில்
எந்த இலை நீ தொட்டது?
எந்த மலர் நீ பறித்தது?
எந்த வார்த்தை எனைக் கொன்றது?
வலிக்கிறதே,
இசைந்தழைக்கும்
ஈர்ப்பு விசையிலும்,
நீ இல்லா இவ்வெறுமை!

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!