Saturday 1 March 2014

முகமூடி


வார்த்தைகளில் எரிந்து
சினத்தில் வெந்து
தோல்வியில் புழுங்கி
பசியில் வதங்கி
அவமானத்தில் குறுகி
சுயத்தை எரித்து
கண்ணீர் மறைத்து
உழைத்துக் கலைத்து
முகமூடி ஒன்று பற்றி
எரிகிறது இடுகாட்டில்
முகமூடி விலக்கி
முகமூடி மாற்றி - சில
முகங்கள் தெரிகிறது
பொய்யோ மெய்யோவெனும்
கண்ணீர்த்துளிகளோடு!

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!