Monday 3 March 2014

அத்தனை பேரும் ஆண்களே!


ஆசைப்பட்ட கல்விக்
கிட்டவில்லை

காதல் செய்தவனைக்
காணவில்லை

மணவறையில் ஒருவன்
அமரவில்லை

வன்புணர்ச்சி செய்தவன்
மனிதனில்லை

வறுமையை உண்டவன்
யட்சனில்லை

மோகித்து விற்றவன்
மிருகமில்லை

மொட்டுக்களை நசுக்கியவன்
வேலியில்லை

மானத்தை விலைபேசியவன்
காவலனில்லை

எங்கோ ஒளிந்து கொண்டு
அத்தனையையும் வேடிக்கைப்
பார்க்கும் இறையும், நிச்சயம்
பெண்ணில்லை!

அத்தனை பேரும்
ஆண்களே!
 
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!