Tuesday 18 March 2014

கீச்சுக்கள்!

Sans expectations gains ecstasy!
#Rationale

எதிர்பார்ப்பு அற்றுப் போதல், பேரானந்தத்தைத் தரும்!
#பகுத்தறிவு

 ------------------------------------------------------------
When the expression of love is meaningless, remain in silence!

அன்பை உணராத இடத்தில் வார்த்தைகள் தேவையில்லை, அமைதியாய் இருங்கள்!

 --------------------------------------------------------------
 வன்முறை செய்பவனிடம், வன்முறையில்தான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது!
#ரௌத்திரம் பழகு!

 ------------------------------------------------------------------
There is no barrier or excuses if the love is true!
The world is small if the heart is generous!
Keep your smile intact!

முழுமையான அன்பு இருக்குமிடத்தில், தடைகளோ, பொய்யான காரணங்களோ இருப்பதில்லை!

மனதில் பெருந்தன்மை மிகுகையில் இந்த உலகம் கூடச் சிறியதுதான்!

புன்னகையை அணிந்து கொள்ளுங்கள்!

  -----------------------------------------------------------------------
முட்களில் நடந்து பழகிய பிறகு, ரோஜா எதற்கு?   
 -----------------------------------------------------------
Certain lives are only for entertai
nment and enjoyment!
---------------------------------------------------------------------
தினசரி வாழ்க்கையும் கூடச் சில நேரங்களில் தற்கொலைதான்! முழுதாய்ச் சாகும் வரை வாழத்தான் வேண்டும்!
--------------------------------------------------------------------------
தாய்க்கு தாய்மையையும், தந்தைக்குக் கடமையையும் நினைவுறுத்த தேவையில்லை, அவர்கள் உணராமல் போனால், அங்கே தாய்மையும் இல்லை, தந்தையும் இல்லை!
#உணராதவரிடத்தில் அகப்பட்ட குழந்தை, இருந்தும் இல்லாத அநாதைதானே?!

-----------------------------------------------------------------------------------

அலுப்பும் சலிப்பும் மிகுகையில்
பொறுமையும், கற்றலும், கேட்டலும் குறைந்து விடும்!

------------------------------------------------------------------------------------
கோபமும் ஆற்றாமையும் சேர்ந்திட்டால் பெரும் வன்முறையே நிகழும்! அந்த வன்முறையின் முடிவில் நிகழ்வது என்னவோ, நிச்சயம் ஒரு மரணம்!
அஃது உடலோ, மனமோ யார் அறிவார்?!

----------------------------------------------------------------------------------------
ஒரு போதும்,
"வேடிக்கை" மட்டும் பார்ப்பவர்கள் முன்பு
அழாதீர்கள்!
 
 
 
 
 
 

-------------------------------------------------------------------------------------------
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!