Tuesday 21 February 2017

போதும்!

நகையில்லையென்றாலும்,
ஆடையிருந்தாலும்,
குழந்தையென்றாலும்
கிழவியென்றாலும்
கசக்கப்படுவதற்கும்
கொல்லப்படுவதற்கும்
அவர்கள் பெண்கள் என்பதே
போதும்!


எதிரேயிருப்பது
மகளா மனைவியா தாயா
என்று தெரியாத அளவிற்கு
புணரும்
மனிதர்களின்
காமத்துக்குக் காரணம்
அவரின் போதையில்லை
பெண்களின் ஆடையில்லை
அவர்கள் தறிகெட்ட
ஆண்கள் என்பதே
போதும்!

ஒருவனைக்கூட
கடுமையாய் தண்டிக்க முடியாத
உங்கள் சட்டம் மாறாதவரை
உங்கள் வழக்கு விவாதங்களைத்
தள்ளிவைத்துவிட்டு
பெண்ணற்ற பூமியாக
இதை மாற்றிக்கொள்ளுங்கள்
கொல்லுங்கள்
#போதும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!