Tuesday, 21 February 2017

வெட்கப்பூக்கள்

Image may contain: 1 person, outdoor
 இந்த இரவில்
மின்னும் நட்சத்திரங்கள்
விடியலில்
மறைந்துவிடும் மாயமோ
காதல்?

அன்றி
வெப்பம்
சூழ்ந்த நிலத்தில்
வீசும் வேம்பின்
காற்றோ
காதல்?

இச் சாமரம்
வீசும் காற்றில்
ஓயாது
சலசலக்கும்
இலைகளின் குரலா
காதல்?

கிளைக்குக் கிளைத்
தாவி
அன்றில்கள்
ஒன்றின்மேல் ஒன்று
தழுவிக்கொள்ளும்
வேட்கையா
காதல்?

ஒருமணித்துளியில்
மலரும் காதல்
ஒரு மழையிரவில்
கரையும் காதல்
காதலின் வகையை
காதலே அறியா
தேசத்தில்
தோல்வற்றிச்
சுருங்கி
எலும்புகள் தேய்ந்து
பாக்குரலில்
வெற்றிலையிடிக்கும்
பாட்டியொருத்தி
அதில்
ஒரு பிடிச் சூழற்றி
தாத்தனுக்கூட்ட
ஆண்டுகள் கடந்த
காதலில்
அதே
வெட்கப்பூக்கள்
வாசனையோடு!
#வெட்கப்பூக்கள்

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...