Tuesday 21 February 2017

மக்களின்வெறுப்பு

#அணுக்கதை
முன்னொரு காலத்தில், வணிகரொருவர் எப்போதும் செருப்பை வெளியே விட்டு, குடையை உள்ளே வைக்கும் கதையைக் கேட்டு நொந்துக்கொண்டிருந்த செருப்பு, கலியுகத்தில் தனக்கு வந்த வாழ்வையெண்ணி, குடையிடம் சொல்லியது;

செருப்பை வைத்து ஆட்சி
செய்தது இதிகாசம்
செருப்பே ஆட்சி
செய்வது
ஜனநாயகம்! 


இதைக்கேட்ட குடை;

வைக்க வேண்டிய
இடத்தில்
உன்னை வைத்தவரை
மனிதர்கள்
வாழ்ந்தார்கள்
அரியணையில்
வைத்த நாள்முதல்
நிலை தாழ்ந்தார்கள்

என்று சொல்லிவிட்டு,

வறண்ட வானத்தை
பார்த்துக்கொண்டே
இருந்தது குடை
கையறுநிலை
மக்களைப்போல!
பி.கு: இது அரசியல் பதிவல்ல
#மக்களின்வெறுப்பு

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!