Tuesday 21 February 2017

விடியும்

வறண்ட பூமி,
பெய்தும் பெய்யாமலும்
தீர்க்கும் மழை
கடும் குளிர்
சுடும் அனல்
திருட்டுக்கூட்டம்
தண்ணீர் பற்றாக்குறை
சாராயத்தின் ஆறு
கூன் மந்திரிகள்
கொலைக்கார செங்கோல்
செல்லாத நோட்டுகள்
பறந்துக்கொண்டேயிருக்கும்
மத்திய அதிகாரத்தட்டு
சாதிய ஓநாய்கள்
காவல் நரிகள்
குழந்தைகளின் சவக்குழிகள்
சுடுகாட்டுப் பேய்கள்
அறிவற்ற ஆடுகள்
கொடூர விபத்துகள்
மர்ம மரணங்கள்
காகிதத் தாள் உலகம்
இத்தனையும் மீறி
வாழ்தல் பேராதிசயம்
இருண்டு கொண்டேயிருக்கும்
புலர் காலைப் பொழுதாக
இதைக் கருதினால்
சட்டென்று விடிந்துவிடும்
நேரம் அருகில்தான்
வினைவிதைத்தவன்
வினை அறுப்பான்
வெளிச்சப்புள்ளி வந்துவிடும்
காத்திருப்போம்
காலம் கனியும்வரை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!