Sunday 17 February 2019

கீச்சுக்கள்!

காதலென்பது கடலைப்போல, அடிக்கடி ஆர்ப்பரித்தாலும், அன்பு ஆழமாய் இருத்தல் வேண்டும்!
---------------

கல்லறைகள் காதலின் சின்னம் அல்ல,
நேரத்திற்கேற்பவும், தேவைகேற்பவும் மாறாமல், உணர்வுகளை மதித்து வாழ்விப்பதே காதல்!!!
-------------

எதிர்ப்பார்ப்புகளைச் சுமந்து ஏமாறுவதைவிட, ஏதுமற்று தனித்திருக்கும் நிலை நலம்!
---------------

காதல் எந்த வடிவத்திலும், நிறத்திலும் இல்லை, அது எப்போதும் அன்பும் கருணையும் நிறைந்திருக்கும் மனங்களில் மட்டும் காதலாக வாழ்கிறது!
-------------

இரையாகும் மானிடம் புலிக்கு ஏது இரக்கம்?
-----------------

இலை உதிர்தல் போல் அத்தனை எளிதானது ஒருவரை அவமதிப்பது! அன்பு பாராட்டுவது என்னவோ, விதை விதைத்து, மரம் வளர்ப்பது போல, சாத்தியப்படுத்தும் மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை!
--------------

இறுதியில் ஒன்றுமில்லை
அதற்குத்தான் எத்தனை வழக்கு?!
#வாழ்க்கை

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!