Wednesday 3 October 2012

வாழ்க்கை


குடும்பத்துக்காக ஓடி...
குடும்பத்தை விட்டே ஓடுகிறார்கள்
நேரம் இல்லாமல்..

நட்புக்காக/காதலுக்காக ஓடி
அவைகளை மறந்தே ஓடுகிறார்கள்
மனதில் ஈரம் இல்லாமல்....

ஓடி ஓடி களைத்தபின்
நாய் பிழைப்பு நானும்
உழைத்து கண்டதென்ன
உழன்று வாழ்ததென்ன
என்று வருந்தி சாவதென்ன...

வாழும் காலம் முழுக்க
வாழும் காலம் இல்லை
சிறிது நேரம் நம்பியவர்க்காய்
நமக்காய் செலவு செய்ய
காலன் விரைந்து வருவதுமில்லை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!