Monday 8 October 2012

மழை

சட சட வென்று ஆர்பரித்தாய்
ஜனனம் ஒரு மாற்றத்திற்காய்
கற்று கொடுத்தாய்
பிறக்கையில்

மட மட வென்று கலந்தாய்
வீழ்வது ஒரு எழுச்சிக்காய்
நம்பிக்கை தந்தாய்
வாழ்கையில்

பட பட வென்று பதறினாய்
பொங்கியது ஒரு ஆறுதலுக்காய்
துயர் துடைத்தாய்
துவள்கையில்

எம்மண்ணில் வீழ்ந்தாலும்
நீ தழைத்தாய்
எல்லோருக்குமாய் உழைத்தாய்
என்றும் என் தோழியாய்
மழையே நீ!

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!