Thursday 25 October 2012

ஆளுமை


அப்பா சொன்னார்
எந்த உடை பொருத்தமென்று!

அண்ணன் சொன்னான்
எந்த படிப்பு உகந்ததென்று!

மாமா சொன்னார்
எந்த வரன் சிறந்ததென்று!

கணவன் சொன்னான்
எதுயெது பிடிக்குமென்று!

அத்தனைக்கும் செவிசாய்த்து
விருப்பமில்லா செயலில் ஈடுபட்டு
தோற்று போகையில் - கேட்டீர்கள்,
"சுயபுத்தியே இல்லையா என்று?"
பெண் மனம் அறியா நீங்கள்
மேதைகள்.......!

1 comment:

  1. நான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது அக்கா ஏன் எனில் நம்மை பெற்றோர் நல்ல அறிவைத்தான் சொல்வார்கள் யாரும் எந்த பெற்றோரும் தவறான வழிகாட்டுவதில்லை கெட்டுபோவதற்கு வழி சொல்ல மாட்டார்கள்

    ஏன் நம்மை பெற்ற தாய் தந்தையர்கள் நீங்கள் சொல்வதை போல் எல்லாம் செய்துவிட்டு

    பிறகு
    பெண் மனம் அறியாமல்
    "சுயபுத்தியே இல்லையா என்று நம்மை பார்த்து கேட்டுவிடடால்
    நீங்கள் கடைசிவரை சுய புத்தியே இல்லாமல் இருந்துவிடுவீர்களா என்ன,,

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!