Wednesday 24 October 2012

வழக்கம்


வேரோடு பிடுங்கி வந்தாய்
உன் தோட்டம் தழைக்க
நட்டு வைத்தாய்
கிளைகளை வெட்டி விட்டாய்
களை எடுத்ததாய் உவகை கொண்டாய்
குலை விட்டால் மகிழ்ச்சி!
மலடானால்,  மறுபடி
ஒரு செடியோ அல்லது மரமோ
மறந்தும் மண் பரிசோதனை
மட்டும் கிடையாது!

காடு நிறைந்திருக்கும்
தோட்டம் எதற்கு?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!