Sunday 14 October 2012

மௌனம்

மௌனம்
----------------
வா என்கிறாய்,
வந்தபின்
வார்த்தைகள் அற்று நிற்கிறாய்!

போ என்கிறாய்
போன பின்
மனம் கலங்கி தவிக்கிறாய்!

சொன்ன பொருள் புரியவில்லை!
செய்கையின் அர்த்தம் அறியவில்லை!

கைப்பற்று என்றாய்
போகும் முன் ஒருதரம்

பற்றிய கைகளின் வெம்மை
உயிர் நுழைந்து
மறுபடியும் துளிர்த்தது காதல்
மௌனமே மொழியாக
சேர்ந்து இருப்போம் வா!


2 comments:

  1. இரு உயிர்களின் உள்ளத்தில் எழுகின்ற நிகழ்வுகளை எதார்த்தமாய் பதிவு செய்துள்ளீர்கள் மிகவும் அருமை இருப்பினும் மனதில் இதை படித்தபின் ஒரு தாக்கம் எதோ ஒன்று ஏக்கமாய்,,

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!