Thursday 1 November 2012
ஏன் கண்ணீர்?
எனக்கான கஞ்சி
நான் அழுதால் கிடைத்திடுமோ?
சொல் அழுகிறேன்....
எனக்கான நேசம்
நான் அழுதால் வந்திடுமோ?
சொல் அழுகிறேன்...
எனக்கான கனவு
நான் அழுதால் பலித்திடுமோ?
சொல் அழுகிறேன்
கண் வலிப்பதால் அல்ல
கண்ணீர்
மனம் வலிப்பதால் - அது
புரியாதவரிடம்
ஒருபோதும் அழுவதேயில்லை!
அழுதழுது கரைய நான் உப்பில்லை
ஆழ உறைந்து
வைரமாய் தணன்று
கொண்டிருக்கும்
ஒரு கரித்துண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப...
புலம்பல் எதுவுமில்லாமல் தன்னம்பிக்கை தரும் கவிதை...! அருமை..!
ReplyDelete