Monday 22 April 2013
காட்சிப் பிழை
வேண்டாத முதிய மரம் கொல்லையில்
முடங்கி ஆவிப் பிரிந்திட - சாய்ந்த விறகு
மாலையோடு நடுவீட்டில்
ஊர் மெச்சிட -
வறுமையில் உழன்ற தோழமை
வயிறுக் காய்ந்திட - ஓடி வந்தன
உறவுகள் வெளிச்சம் பரவிட
கொடுமை சகித்துப் பெண்மை
துன்பத்தில் உழன்றிட - துதித்துப்
போற்றியது சமூகம் பெருமைப் பொங்கிட
குடும்பம் காக்க ஒருவன்
உழைத்துக் களைத்திட - அகம் மறைத்தாள்
வீட்டுப்பெண் கனவில் திளைத்திட
இனம் அழிக்க படை அனுப்பி ஒருவன்
பாதகம் புரிந்திட - அவன் குலம்
அழிய அழுகிறான் ஒருநாள் உயிர்ப் பதைத்திட
மரம் வெட்டிக் காடழித்து
மழைக் குறைத்திட - கையேந்தி
மழை வேண்டி நிற்கிறான் தாகம் தீர்ந்திட
இருப்பதை அழித்திட்டு வேண்டி நின்றி இறைஞ்சிட
அகம் மறைத்து பொய்யுரைத்து கள்ளம் புரிந்திட
தாராத அன்பையெல்லாம் பின் கல்லறையில் கரைத்திட
பெரும் காட்சிப் பிழையோ வாழ்க்கை, பிறழாது வாழ்ந்திட??
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப...
No comments:
Post a Comment