Monday 22 April 2013

காட்சிப் பிழை







வேண்டாத முதிய மரம் கொல்லையில்
முடங்கி ஆவிப் பிரிந்திட - சாய்ந்த விறகு
மாலையோடு நடுவீட்டில்
ஊர் மெச்சிட -

வறுமையில் உழன்ற தோழமை
வயிறுக் காய்ந்திட - ஓடி வந்தன
உறவுகள் வெளிச்சம் பரவிட

கொடுமை சகித்துப் பெண்மை
துன்பத்தில் உழன்றிட - துதித்துப்
போற்றியது சமூகம் பெருமைப் பொங்கிட

குடும்பம் காக்க ஒருவன்
உழைத்துக் களைத்திட - அகம் மறைத்தாள்
வீட்டுப்பெண் கனவில் திளைத்திட

இனம் அழிக்க படை அனுப்பி ஒருவன்
பாதகம் புரிந்திட - அவன் குலம்
அழிய அழுகிறான் ஒருநாள் உயிர்ப் பதைத்திட

மரம் வெட்டிக் காடழித்து
மழைக் குறைத்திட - கையேந்தி
மழை வேண்டி நிற்கிறான் தாகம் தீர்ந்திட

இருப்பதை அழித்திட்டு வேண்டி நின்றி இறைஞ்சிட
அகம் மறைத்து பொய்யுரைத்து கள்ளம் புரிந்திட
தாராத அன்பையெல்லாம் பின் கல்லறையில் கரைத்திட
பெரும் காட்சிப் பிழையோ வாழ்க்கை, பிறழாது வாழ்ந்திட??

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!