Saturday 27 April 2013

இடியாப்பச் சிக்கல்

அன்பில் குழைந்து
ஆளுமையில் அழியும்
காதல்

திருமணத்தில் சேர்ந்து
இருமனத்தில் சேராத
பந்தம்

மடியில் சுமந்து
மனதில் சுமக்காத
தாய்மை

நம்மில் தொடரும்
நாட்பட வளரும்
நட்பு

சொல்லில் சினந்து
நொடியில் பிரிக்கும்
கோபம்

கவனம் சிதைந்து
காற்றில் கலக்கும்
உயிர்

வியர்வையில் வளர்ந்து
வெறுப்பில் வீழும்
தொழில்

தொடர்வண்டியாய் நீளும்
தோல்விக் கண்டுத் துவளும்
இடியாப்பச் சிக்கலில் இறைவன்
என்ன செய்வார் பாவம்?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!