அன்பில் குழைந்து
ஆளுமையில் அழியும்
காதல்
திருமணத்தில் சேர்ந்து
இருமனத்தில் சேராத
பந்தம்
மடியில் சுமந்து
மனதில் சுமக்காத
தாய்மை
நம்மில் தொடரும்
நாட்பட வளரும்
நட்பு
சொல்லில் சினந்து
நொடியில் பிரிக்கும்
கோபம்
கவனம் சிதைந்து
காற்றில் கலக்கும்
உயிர்
வியர்வையில் வளர்ந்து
வெறுப்பில் வீழும்
தொழில்
தொடர்வண்டியாய் நீளும்
தோல்விக் கண்டுத் துவளும்
இடியாப்பச் சிக்கலில் இறைவன்
என்ன செய்வார் பாவம்?
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப...
No comments:
Post a Comment