Tuesday 9 April 2013

கண்டது!

தார்பூசணிகளை தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார் ஒருவர்.
துண்டுபோட்டா பத்து ரூபாய், முழுசா வாங்குங்க முப்பது ரூபாய், கூவி கூவி அழைத்தார்.
இந்த பழத்துக்கா முப்பது ரூபாய்? குறைச்சு சொல்லு என்றார் ஒரு பெண்மணி
"அக்கா மார்க்கெட்டுக்கு போய்ப் பாரு..இதை விட அதிகம், என் மாமனாருக்கு ஐநூறு ஏக்கர் இருக்கு அதுதான் இந்த விலை" என்றார் பழ வியாபாரி.
அதுதானே பார்த்தேன் மாமனார் வீட்டு பழமா? - கிண்டலாய் பதில் வந்தது அந்த பெண்மணியிடம் இருந்து....."யக்கா"....என்று பரிதாபமாய் சொல்லிவிட்டு வேகமாய் வண்டியை உருட்டி சென்றார் வியாபாரி .
இனிமேல் எந்த உறவுமுறையை சொல்லி விற்பாரோ வியாபாரி?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!