Saturday 27 April 2013

ஒரு கதை பல முகம்

கோடுத் தாண்டிய சீதையால்
உங்களுக்கு இராமாயணம் கிடைத்தது
இராமனைச் சிந்தையில் வைத்த
மகளுக்கு அவனில் தெளிவுப் பிறந்தது!

சூதாடிக் கணவன்களின் மடமையைப்
பொறுத்தப் பெண்ணினால்
உங்களுக்கு மகாபாரதம் கிடைத்தது
அர்ஜுனனின் பேசா மடந்தைக்கு
பின்னாளில் உணர்வுப் பிறந்தது

கேட்டப் பாடம் ஏட்டினில்
கடந்தப் பாடம் மனதினில்!
எண்கள் சூழ்ந்த வாழ்க்கையில்
எண்ணங்கள் மாறும் மனநிலையில்
இதிகாசங்கள் தொடர்கதைகள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!