அடிப்பேன் என்று சொன்னவுடன்.......அடி வாங்கி
துடிப்பதுப் போன்று தரையில் துள்ளி விழுந்து புரண்டு, அடியே வாங்காமல் அடி
வாங்கிய "effect" கொண்டு வருகிறார்கள் வீட்டில் வளரும் ஸ்டண்ட் மாஸ்டர்கள்!
# குழந்தைகள்
--------------------------------------------------------------------
எந்த தவறையும் பொறுத்துக்கொள்ளும் போது, அது
தவறு செய்பவனின் உரிமை ஆகிறது, உரிமை கொண்டவன் தலைவன் ஆகிறான், பொறுத்துக்
கொண்டவன் அடிமை ஆகிறான்!
----------------------------------------------------------------------
நீரில் ஏற்படும் மாசு, நிலத்தை பாதிக்கும்,
நிலத்தில் ஏற்படும் மாசு, பசுமையை அழிக்கும், அழியும் பசுமை, மழையை
தடுக்கும், தவறும் மழை வளத்தை குலைக்கும், வளம் குலைகையில், குற்றம்
பெருகும், குற்றம் பெருகுகையில், மனவளம் தடுமாறும், மனவளம் தடுமாறுகையில்,
உறுதி குலையும், உறுதி குலைகையில், ஒற்றுமை குலையும், ஒற்றுமை குலைகையில்,
தீண்டாமை தலைதூக்கும், தீண்டாமை தலையெடுக்கையில், பிற்போக்குத்தனம் வளரும்,
பிற்போக்குத்தனம் வளருகையில், மீண்டும் கற்காலம் வரும்........ஆனால்
இனிவரும் கற்காலத்தில் கல்லும் மண்ணுமே இருக்கும், ஆதாமோ, ஏவாளோ, ஆப்பிளோ
அல்ல!
-----------------------------------------------------------------------
திரைக்காட்சியில் காணும் சித்திகரிக்கப்பட்ட
துயரத்துக்கு "உச்" கொட்டி, ஐயோ பாவம்! என்று பரிதாபப்படும் நமக்கு
வாசலில் பசியால் ஒலிக்கும் ஒரு ஏழையின் யாசகக் குரல் ஒருபோதும்
கேட்பதேயில்லை!
Tuesday, 9 April 2013
Subscribe to:
Post Comments (Atom)
My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine
My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...
-
My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...
-
தினம் பிறக்கும் மணம் பரப்பும் - மலர்கள் வாடி உதிரும்வரை! ஒரே நாள் வாழும் மகரந்தம் பரப்பும் - பட்டாம்பூச்சிகள் உயிர் பிரியும்வரை! நூறு ஆண்டுக...
இனிவரும் கற்காலத்தில் கல்லும் மண்ணுமே இருக்கும் என்பது நீங்கள் சொல்வதை என் ஆழ்மனம் மிகவும் சிந்தனை செய்கிறது இப்பவே குற்றம் பெருகி மன உறுதி குலைகின்ற நிகழ்வுகளை நாம் பார்க்க நேருகிறது அது சரி அக்கா அது என்ன பிற்போக்குத்தனம் பிற்போக்குதனம் என்றால் என்ன புரியவில்லை
ReplyDeleteவாசலில் பசியால் ஒலிக்கும் ஒரு ஏழையின் யாசகக் குரல் ஒருபோதும் கேட்பதேயில்லை! என்பது இருக்கட்டு விழுதுகள் விரட்டி அடிக்கப்பட்டதால் ஆழமரங்கள் அடைக்கலம் புகுகின்ற இடமாக பல ஆனாதை ஆசிரமங்கள் உள்ளதையும் சற்றே இதில் காட்டியிருக்கலாமே அக்கா
ReplyDelete