Friday 4 March 2016

பிச்சை வரி!


வரியென நூறில்
முப்பது ரூபாய் பிடுங்கி
உண்ணும் உணவில்
சேவை வரி பிடுங்கி
வாங்கிய பொருட்களுக்கு
விற்பனை வரி பிடுங்கி
கல்வி வரியெனப் ஒன்றைப் பிடுங்கி
அப்படி இப்படி என்று பிடித்தது போக
சில பல முதலாளிகளின்
சில கோடி வரிகளை
ரத்துச் செய்து
நிலத்தையும் நீரையும்
காற்றையும் பணத்தையும்
ஒன்றுபோலவே ஊழலில்
சேதப்படுத்தும் அரசு
மீதமென
விட்டு வைத்திருக்கும்
என் கையில் உள்ள சில்லறைகளை
வீதி வழியே இரந்து நிற்கும்
என்னிலும் வறியவர்க்கு
ஈந்து தீர்க்கிறேன்
என் கையிருப்பின் கடைசி நாணயம்
தீரும்போது
நீண்டு கொண்டிருக்கும்
இந்தப் பிச்சைக்காரர்களின் வரிசையில்
ஓர் எண்ணிக்கை நானாகக் கூடும் நாளை

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!