Monday 21 March 2016

பெயரறியா மரம்!

பெயரறியா
அம்மரத்தினடியில்
அதன் பெயர் கேட்காமல்
அமர்ந்திருந்தேன்
பெயர் கொண்ட என்னையும்
அது பெயரிட்டு அழைக்கவில்லை
நான் ஒன்றும் கேட்கவில்லை
அதுவும் ஒன்றும் சொல்லவில்லை
ஓய்ந்து போய்ச் சாய்ந்தவளை
அன்னையாய் அணைத்து
ஏனோ துளிர்த்தக் கண்ணீரை
தந்தையாய் சாமரத்தில் விசிறி
உயிர்க்கொண்ட பெருங்கருணையாய்
மரம் உயர்ந்திருந்தது!

பெயர்களைத் தாண்டி
இப்போது நாங்கள்
பேசிக் கொள்ளத் தொடங்கினோம்
ஆழ்ந்த மௌனத்தின் தீண்டலில்
நிறைந்த காதலுடன்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!