Monday 21 March 2016

கீச்சுக்கள்

 
பிள்ளைகள் மற்றும் என் அம்மாவுடன் பள்ளிக்குச் சென்று திரும்புகையில், குயின் மேரிஸ் கல்லூரியின் எதிரே உள்ள காவல்துறை அலுவலகத்தை ஒட்டி ஒரு மாநகரப் பேருந்து செல்கிறது, அதன் அருகில் என் கார், ஒரே நேர்கோட்டில் அருகருகே செல்கிறோம், திடீரென்று ஒரு ஸ்கூட்டிப் போல் ஏதோ ஒரு இரு சக்கர வாகனத்தில் எவனோ ஒருவனும் அவனின் பின்னே அவன் தோள் பற்றிய படி அக்கல்லூரி மாணவியும், இடதுபுறத்தில் இருந்து குறுக்கு வாட்டில் கண்மண் தெரியாத வேகத்தில் பாய, நான் சட்டென்று ப்ரேக்கை அழுத்த, பக்க வாட்டில் பல்லவன் கவனிக்காமல் இன்னும் கொஞ்சம் முன்னே வந்து சுதாரித்து ப்ரேக்கை அழுத்த, மயிரிழையில் உயிர் தப்பினார்கள் அவர்கள் இருவரும்! தலைக்கவசம் இருவருக்கும் இல்லை! தொண்டைவரை வந்து, பிள்ளைகளைக் கருதி நான் விழுங்கிய செந்தமிழ் வார்த்தைகளை, பேருந்து ஓட்டுனர் அவர்களை நோக்கி வீச, காதல் பறவைகள் வேறு திருப்பத்திற்கு பறந்து விட்டது!
நிச்சயம் அவர்கள் தெய்வீகக் காதலர்களாய் தான் இருக்க முடியும்! 🤔

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!