Monday 21 March 2016

கீச்சுக்கள்!

கங்கையில், யமுனையில் மூழ்கினால் பாவம் கரையுமென்றால், நீதிமன்றங்கள் குற்றவாளிகளை அங்கேயே அனுப்பிவிடலாம், வழக்குச் செலவாவது மிச்சமாகும்!
நதிகள் முழுதும் அசுத்தமாகும் போது குளிர்பானங்களை கொண்டு குளித்துக் கொள்ளட்டும்!

--------------------------
உனக்கும் கடவுளுக்கும் நடுவே ஆசாமிகள் எதற்கு? கடவுள் என்ன அரசியல்வாதியா, இந்த இடைத்தரகர்கள் மூலம் அவர் உனக்கு கருணைக்காட்ட?
அவரவர் மனதில் இருக்கிறார் கடவுள், தன்னையறியாதவன் யாரோ ஒரு ஆசாமியின் தொண்டனாகிறான், வாழும் நாட்களைத் தொலைத்து வாழும் கலை கற்கிறான்!

-----------------------------
இன்று அலுவலகத்திற்குச் செல்லும் வழியில், என் வாகனத்திற்கு முன்பு "இந்திய அரசு" என்று எழுதப்பட்டிருந்த ஒரு கார் மிக மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது!
தட் தமிழகத்தில் "அரசு இயங்கக்கூடாது" என்ற தேர்தல் நடைமுறைகளைச் சரியாய் பின்பற்றும் "மத்திய அரசு"

----------------------------------------

மக்களே, தமிழ்நாட்டுல மட்டும் சுமாரா ஆறு கோடி மக்கள், ஆளுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டும் அனுப்பி வெச்சிங்கன்னா, ........ண்ணா...அக்கா...தங்கச்சி...நான் விஜய் மல்லையாவோட கடனைக் கொஞ்சம் அடைச்சுட்டு...அப்படியே லண்டன் போய்டுவேன்....நாமதான் இந்தியாவோட கடனை அடைக்கணும்!
‪#‎தேசபக்தர்கள்‬
 -----------------------------------

இந்தச் சாமியார்கள் எல்லாம் "உனக்கு வாழுற கலையைக் கத்து தரேன்னு வா, இதைச் செய் அதைச் செய்ன்னு" சொல்லி, கோடிக்கணக்கா வசூலிச்சு வெச்சு இருக்கப் பணத்தைச் செலவு பண்ணாலே போதும், இந்தியாவில் இருக்குற கடைகோடி ஏழைக் கூட எல்லாம் கிடைச்சு நல்லா வாழ்வான், ஆனா வாழுற கலையெல்லாம் பணம் கொட்டிகிடக்குற மனசு இல்லாத பயலுகளுக்குத் தான் தேவைப்படுது!
தினம் யாரோ ஒருவனுக்குச் சோறு போடுங்க, ரோட்டில் போற விலங்குகளுக்கு மனிதர்களுக்குக் கருணை காட்டுங்க, பெரிய அளவுல சமூகத்தை மாத்த முடியலைனாலும், இன்னைக்கு முடிஞ்சத நிறைஞ்ச மனசோட செஞ்சுட்டுப் படுத்தாலே நல்லா தூக்கம் வருமே, "வாழும் கலையைத் தேடி மனம் சுருங்கி இருட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களே, ச்சே வள்ளல்களே!?"
--------------------------------

ஏற்கனவே ஷேர் மார்கெட்டின் காளை உருண்டு புரண்டு கொண்டிருக்கிறது எழுந்திருக்க முடியாமல், இதில் பத்தாயிரம் கோடி தின்று, கொழுத்த பன்றி ஒன்று வெளிநாட்டுக்குப் பறந்து சென்று விட்டதென்று, படித்த முதலைகள் எல்லாம் நீலிகண்ணீர் வடிக்கிறதாம்!
மக்கள் பணத்தைத் தூக்கிக் கொடுத்தவனை எல்லாம் அரசு என்ன செய்யப்போகிறது? "அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா" என்று பத்தோடு இது ஒன்று பதினொன்று என நாமும் கடந்து போவோம், வருங்காலத்தில், "‪#‎விஜய்_மல்லையாவின்‬ கேளிக்கை வரி" ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும்!

-------------------------------------------

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!