Tuesday 25 July 2017

மதிமயக்கம்

அந்தக் கவிஞரின்
பக்கத்தில் அதைப்படித்தவர்கள்
முதலிரண்டு வரியைப்
படித்துவிட்டு
அற்புதம் என்று
பதிலுரைத்தார்கள்
தலைப்பை மட்டும்
படித்தவர்கள்
உங்களைப் போல
வருமா என்று புகழாரம்
சூட்டினார்கள்
கடைசி பத்தியின் கீழே
வேறு பெயரை கண்டவர்கள்
ஓஹோ இது யார்
என்றார்கள்
அது யாரோ ஒரு
பெண்ணென்று அறிந்ததும்
வெண்பாவின் இரண்டாவது
வரிகள் சரியில்லை
என்றார்கள்
இன்னும் சிலர்
இதை நீங்கள் திருத்தம்
செய்யலாம் கவிஞரே என்றார்கள்
மேலும் சிலர்
இதைக் கட்டுரையாய்
சமைத்திருக்கலாம்
கதையாய் மாற்றியிருக்கலாம்
என்று ஆலோசனைகள்
கூறினார்கள்
கவிதை சமைத்தவள்
இறுதியாய் வந்து நின்றாள்
"வெண்பாவின் தொனியென்று
கழுத்தை முறிக்க முடியாது
புகழாரம் கேட்க
பாலினத்தை மாற்றமுடியாது
ஒரு சார்பு பொய்யான
நேர்மறை கூற்றுக்காக
பிறர் தோளின் பின்னே
ஒளிய முடியாது
இது என் குழந்தை
இதன் உறுப்புகளைச் சிதைக்கும்
நோக்கமில்லையென்று
நன்றி நவின்று
விலகிச் சென்றாள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!