Monday 17 July 2017

வேடிக்கை_மனிதர்கள்

உட்லண்ட்ஸின்
லெதர் ஷூ அணிந்து
மனைவிக்கு
காஞ்சிபுரத்தில்
பட்டுகள் வாங்கி
தொழுவத்தில்
மடிவற்றிய மாட்டை
அடிமாடாக விற்றுவிட்டு
அவ்வப்போது
காட்லீவர் ஆயில்
மாத்திரைகள்
சாப்பிட்டு வந்த
அம்பி
மாட்டுக்கறி சாப்பிடாதே
என்று கோஷமிட்டு
வந்தான்
தொழுவத்தில்
எஞ்சியிருந்த மாடுகள்
அம்மா என்றழைத்தன
மனிதர்களின் அலப்பறைகளைத்
தாளமுடியாமல்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!