Tuesday 25 July 2017

கணக்கொன்றே எஞ்சியிருக்கிறது



உணவென்றெழுதினால்
தீராத பசி போல
அன்பென்று
மௌனத்தில்
அடைக்காப்பதும்
சம்பிரதாய
வறட்டு வார்த்தைகளை
பிய்த்தெரிவதும்
துன்பியலேயன்றி
அன்பாகுமோ
பூமியிலே?!

வெடித்து கிடக்கும்
செம்மண் பூமியில்
தூறிவிட்டுச் செல்லும்
மழைபோலே
காலமெல்லாம்
எதிர்நோக்கும் உறவிடம்
கடிகாரத்தின் கணக்கில்
வார்த்தைப் பிச்சையிட்டு
உறவாடுதல்
காதலாகுமோ
மனிதப்பிறவியிலே?!
காற்றில் ஈரமிருக்கிறது
சிதை எரிக்கும்
தணலில்
கருணையிருக்கிறது
மழையில்
தாய்மையிருக்கிறது
இந்த மாந்தர்களின்
மனதில்தான்
எல்லாவற்றிற்கும்
கணக்கொன்றே
எஞ்சியிருக்கிறது,
சுணக்கமாய்
கூட்டிக்கழித்தல்
மட்டுமே
சுவைக்கூட்டுமோ
இவ்வாழ்க்கையிலே?!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!