Monday 17 July 2017

நீ_நான்_மழை

Image may contain: outdoor
"ஒவ்வொரு
மழைத்துளியிலும்
ஒரு கவிதைத்
தோன்றுகிறதே
ஒருவேளை
உன்னை சந்தித்த
முதல்நாளும்
மழைப்பெய்ததாலா?"
என்கிறேன் நான்

"ஒவ்வொரு
மழைநாளும்
எனக்கு சிலிர்ப்பூட்டும்
மழையெய்யும்
போதெல்லாம்
குழந்தையின்
குதூகலத்தில்
நீ என்னை
இறுக அணைத்து
முத்தமிடுவாயே!"
என்கிறாய் நீ
"குளிர்ச்சியில்
செம்மைபடருமா?!"
என்று கன்னம்
தொட்டு
வார்த்தைகளின்
வாசல் அடைக்கிறாய்
மௌனம் சூழ்ந்த
எல்லா
மழைநாளிலும்
நீயும் நானும்
கரைகிறோம்
வெளியே வெட்கமாய்
கரைகிறது மழையும்!
#நீ_நான்_மழை

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!