Tuesday 25 July 2017

கீச்சுக்கள்

சம்பாதிக்கும் பணத்தில் வரிகள் பிடிங்கி, எல்லாமும் "வெள்ளைப்பணமாய்" இருந்தாலும், அதை எடுத்து செலவு செய்வதற்கு காரணமும் அதற்கு ஆதாரமும் கேட்கிறது வங்கிகள்! இது சுதந்திர இந்தியா இல்லை, மக்களை சுரண்டிக்கொண்டேயிருக்கிற இந்தியா!
எத்தனை வரிகள், எதற்கெல்லாம் வரிகள்? இத்தனை வரிகள் இத்தனை கெடுபிடிகள் செய்தும் இந்தியா அதே இந்தியாவாக, தமிழ்நாடு அதே நாசமாய் நலிந்துக்கொண்டிருக்கும் நாடாகத்தானே இருக்கிறது? மக்களுக்கு மட்டுமே இரும்பின் பிடி, மற்றப்படி அதே ஊழல் அதிகாரிகள், அதே அமைச்சர்கள், அதே அடக்குமுறைகள்!
அரசர்கள் பரவாயில்லை என்று பிரிட்டிஷ் ஆட்சி நினைக்க வைத்தது, பிரிட்டிஷ் அரசே பரவாயில்லை என்று காங்கிரஸ் நினைக்க வைத்தது, காங்கிரஸே தேவலைடா சாமீ என்று பாஜக நினைக்க வைக்கிறது, மற்றப்படி இந்தியாவிற்கு இன்னமும் விடியலில்லை!

********************

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை, சாலை விபத்தில் உலகளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறதாம், இன்னும் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தால் தமிழ்நாட்டின் முதல்வரும் போக்குவரத்து அமைச்சரும் செயல்படுவார்கள்?
#Tamilnadu #Chennai #Roadsafety

**********************

சாதியின், மதத்தின் பெயரில் கண்மூடித்தனமாக மோசமான ஆட்சியாளர்களை ஆதரிப்பதென்பது, நான்கு ஒற்றுமையான மாடுகளை, சிங்கத்தின் இரைக்காக, தனக்காக மிஞ்சும் எச்சிலுக்காக வஞ்சித்து ஏமாற்றிய நரியின் கதை போல் மக்களுக்கு ஏமாற்றமாக முடிந்துவிடும்! மக்களே மாடுகள், அவர்களை பிரிக்கும் நரியின் சூழ்ச்சியே சாதியும் மதமும் அதைச்சார்ந்த கலவரங்களும், இதில் உண்டு கொழிக்கும் கிழட்டுச் சிங்கங்களே அரசியல்வாதிகள்!

***********************

மௌனத்தை புரிந்துகொள்ள
பேரன்பு வேண்டும்!


*******************

நயன்தாரா நகைக்கடைக்கோ வேறு எதற்கோ வந்தபோது கூடிய கூட்டத்தை கண்டு, இந்த சினிமா மோகம் இருக்கிறதே என்று பொங்கியவர்களையும் கூட டிவி நிகழ்ச்சி விட்டுவைக்கவில்லை என்பதுதான் காலத்தின் அழகிய முரண், ஒரு தேர்ந்த டிவி வியாபாரி நடிக நடிகயரை கொண்டு மக்களை எளிதில் வளைப்பது போலவே அத்தனை எளிதில் நம்மை வளைத்துவிடுகிறார்கள்/விடுவார்கள் ஆட்சியாளர்கள்! சில முரண்கள் நகைப்புக்குரியது!

********************


டிவி சீரியல்களில், ரியாலிட்டி ஷோக்களில் "மூழ்கிய" வீடுகளில் உள்ள குழந்தைகள் நல்லதை கற்பதுமில்லை, ஆரோக்கிய உணவுகளை உண்பதும் இல்லை!

**********************




Count your blessings than disappointments, I keep telling myself, until I see the GST charges! Sucking people's blood!

*********************



நாட்டின் வளத்தை காப்பாற்ற மக்கள் போராடும்போது அவர்களை கைது செய்யும் அரசென்பது உண்மையில் தேச விரோத அரசு!

***********************

மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம், நாக்கு!
சிலர் அதைக்கொண்டு உயிர்ப்பிக்கிறார்கள்
ஒருசிலர் அதைக்கொண்டு நேசிப்பவர்களின் உயிரை எடுத்துவிடுகிறார்கள்!


****************************

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!