Monday 22 December 2014

அன்பெனும் திறவுக்கோல்

 
ஆசையாய் வரும் குழந்தையை
அலுப்பாய் ஒதுக்கி நடந்தும்,
வாலைக் குழைத்துவரும் நாயை
எரிச்சலில் எட்டி உதைத்தும்,
அன்பில் உதிரும் வார்த்தைகளை
சினத்தின் குடுவையில் ஏந்தியும்,
ஈயென இரக்கும் வறுமையை
அருவெறுப்பில் அலட்சியப்படுத்தியும்,

ஒருநாள் பொழுதில்,
நீக்கமற நிகழ்த்திவிட்ட
வன்முறையின் நினைவை,
நீண்டதொரு இரவின் உறக்கத்தில்
தொலைத்தெழுகிறோம் - முந்தைய
தினம் கொல்லப்பட்டவர் உயிர்த்தெழ
மறுநாள் அன்பில் நேர்ச் செய்துவிடும்
நோக்கத்தில்!

அன்பெனும் திறவுக்கோல்
எல்லோருக்கும் வசப்படுவதில்லை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!