Friday 26 December 2014

வண்ணச்சிறகின் வாழ்க்கை!

 
எனக்கென நீர்விடும்
உன் கண்களை நாளை
நான் காணேன்!

உன் இதழ்விரிப்பில்
இன்று மலரும் புன்னகைக்கே
என் காத்திருப்பு!

எதிர்நோக்கி, விழுந்து மடியும்
விட்டில் பூச்சியல்ல,
எனினும்,
காத்திருப்பின் நிமிடங்களில்,
கரைந்து கொண்டிருக்கும்,
ஒரு பட்டாம்பூச்சி
மகரந்தத்தைத் தூவியபடி! 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!