Monday 22 December 2014

#‎ஒன்றின்‬ விடுதலை!

 
கண்ணீரில் ஏதும்
கரைந்திடாது
மரணத்தில் மாற்றம்
நிகழ்ந்திடாது
மலர்கள் கூட
மலர்ந்திடாது
அந்தக் கல்லறையின் முன்
மெய்யென உருகி வழியும்
உங்களின்
பொய் வார்த்தைகளால்!

அந்த மரணத்தின்
விடுதலையை விட்டு
சற்று விலகி நிற்போம்
போகும் உயிர் சுதந்திரமாய்
சுவாசிக்கட்டும் ஒரு காற்றையேனும்
இந்த பொய் சூழ் உலகை விட்டு!
‪#‎ஒன்றின்‬ விடுதலை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!