Thursday 20 June 2013

போராளி


கற்கள் மேல் விழ
குருதி நிலம் நனைக்க
முட்கள் பாதை சாய
அவன் நடந்தான்

பார்வைகள் கேலி பேச
காட்சிப் பிழை இமை அழுத்த
கண்கள் நீர் இறைக்க
அவன் தொடர்ந்தான் 

குருதியில் பாதை செழிக்க 
பாதையில் பூக்கள் பூக்க
பிறர் வாழ்வு மலர
அவன் வாழ்க்கை முடித்தான்

மூச்சுக்  காற்று அடங்கிட
இருள் அகற்ற விழிகள் தந்து
இதயம் மட்டும் தீயிலிட்டு
மீளாத் துயில் கொண்டான்
 # போராளி

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!