Thursday 20 June 2013
போராளி
கற்கள் மேல் விழ
குருதி நிலம் நனைக்க
முட்கள் பாதை சாய
அவன் நடந்தான்
பார்வைகள் கேலி பேச
காட்சிப் பிழை இமை அழுத்த
கண்கள் நீர் இறைக்க
அவன் தொடர்ந்தான்
குருதியில் பாதை செழிக்க
பாதையில் பூக்கள் பூக்க
பிறர் வாழ்வு மலர
அவன் வாழ்க்கை முடித்தான்
மூச்சுக் காற்று அடங்கிட
இருள் அகற்ற விழிகள் தந்து
இதயம் மட்டும் தீயிலிட்டு
மீளாத் துயில் கொண்டான்
# போராளி
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப...
No comments:
Post a Comment