Friday 14 June 2013

GIST

பொது மேடையில் வந்து வாக்குவாதம் செய்பவர்கள்தான், உண்மையில் அறிவு, ஆற்றல் கொண்டவர்கள், அமைதியாய் இருந்தால் கோழைகள் என்று அர்த்தம், என்று சூடாய் ஒரு சகோதரர் என்னிடம் கொதித்தெழுந்தார்.....

அவர் சொன்ன பொதுமேடை எல்லாம், FB குழும, சாதி மத பற்றிய மோதல்களையும், இடக்கு மடக்காய் அவர் சொல்லும் கருத்துக்கு எதிர்வினைகளையும் தான்!
வரமாய் அமையும் வாழ்க்கையிலும் வருத்தங்கள் காண்பவர் பலர்
வருத்தங்கள் நிறைந்த வாழ்க்கையையும் தவமாய் கடப்பவர் சிலர்!

--------------------------------------------------------------------------------------------------------- 
அவள், அவன், அவர்கள் என்னும் உயர்திணைகள், உயிர் விலகிய பின் எளிதாய், இது, அது, அவைகள் என்னும் பீடிகைகளில் அடங்கி விடுகிறது!
# வாழ்க்கை நிதர்சனம்!

----------------------------------------------------------------------------------------------------- 
வினையாற்றும் சுயநலவாதிகளாலும், வினை பேசும் பொதுநலவாதிகளாலும் ஒசோன் லேயர் ஓட்டையைத் தாங்கிக் கொண்டு இயங்குது உலகம்! 
------------------------------------------------------------------------------------------------------------------
கோபம் கொண்டு துடிக்கையில், "போய் தொலை" என்று உதடுகள் உமிழும் வார்த்தைகள் உண்மையானால், போன பின், மனம் துடிக்கும், நிரப்ப முடியாத வெற்றிடத்தை காலம் பரிசளிக்கும்!

# யாகாவாராயினும் நா காக்க

-----------------------------------------------------------------------------------------------------------------
   
வாக்குவாதம் செய்பவர்கள் எல்லாம் பொது மக்களுக்கு சேவை செய்பவர்கள் என்றால், சமூக சேவகர்கள் நிறைந்து இருப்பதுதானே கட்சிகள்?!!? சாதி, மத சண்டை இடுபவர்தான் நல்லவர்கள் என்றால், நல்லவர்களுக்கு நாட்டில் என்ன பஞ்சம்?

கவிதை, கட்டுரை எழுதுபவர்கள் எல்லாம், அவர் சொன்ன so called பொது மேடையில் வாதிட முடியாத கோழைகள் என்றும், விமர்சனத்திற்கு பயப்படுபவர்கள் என்றும் அவரே பொங்கி, அவரே வாழ்த்தியும் சென்று விட்டார்....

ஆனால், அந்த பொது நலவாதி, தன் பெயரையோ, புகைப்படத்தையோ இன்னும் வெளியிடவில்லை....fake id புரட்சியாளர்களால் வாழட்டும் சமுகம்!:-)

-----------------------------------------------------------------------------------------------

குழந்தைகளிடம் காட்டும் வன்முறைக்கு பெயர்தான் பலகீனம்
அவர்களிடம் கொட்டும் வெறுப்பில் எழுவதுதான் மிருககுணம்!
 
--------------------------------------------------------------------------------------------------
When a doctor says, 'Dear, you are counting your days and live your life peacefully for the rest of the days to come......'
Our life and thought process changes drastically all of a sudden and a selfless soul emerges!
The reality is, the almighty said so when each soul is born in this world, but our selfishness will change only when a doctor says those lines!
Live every moment!
# Tsunami Truth
---------------------------------------------------------------------------------------------------------------
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!