Tuesday 11 August 2015

முகமூடி

 
நீ ஆணாக நான் பெண்ணாக
 நீயும் நானும் வேறு வேறுதான்
 நான் பேசியதும் நீ பேசியதும்
 வெவ்வேறு வகைகள்தான்
 நீ கரம் பற்றியதும் நான் மருகியதும்
 ஒன்றான அன்பில் நெகிழ்ந்துதான்
 என் வாய் மூடாத ஒலியும்
 ரசித்து நின்ற உன் மௌனமும்
 இனிமை சேர்த்தத் தருணங்கள்தான்,
 அவ்வாறாக
 நீயாக இருந்த நானும்
 நானாக இருந்த நீயும்,
 மனத்தால் நெகிழ்ந்து
 காதலில் கலந்து - ஒரு
 மணத்தால் கரம்பற்றி
 நாமானோம்
 நாமான நாள் முதல்
 நீ நீயானாய் நான் தனியானேன்,
 வார்த்தைகள் குறை
 ஆசைகள் தவிர்
 அன்பைப் பதுக்கு
 மற்றும்
 நீயாகவே இருந்து கொள்ளேன்னென,
 அப்போதும் இப்போதும், என்னிடத்தில்
 இல்லாத முகமூடிகளை
 பட்டியலிட்டு அணியச்சொல்லி,
 இப்போதுதான் நீ,
 உன் முகமூடிக் கலைகிறாய்!

 நீயாகிவிட்ட நீ
 நீயாகவே தொடர
 யாரோவாகி நின்ற நானும்
 முகமூடியில் பொருந்தாமல்
 மூச்சுத்திணறித் தோற்கிறேன்
 தோற்ற அவளையே
 இன்னமும் தேடித் தொலைகிறேன்
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!