Monday 10 August 2015

கீச்சுக்கள்!

இறக்கும்போது ஊற்றும் பாலைக்காட்டிலும்
இருக்கும்போதே தாகம் தீர்க்கும் நீர் சிறந்தது,
தேவைப்படும்போது தரப்படாத அல்லது பெறப்படாத எதுவும்
போற்றப்படுவது இல்லை !
feeling thoughtful.
எந்த ஒரு முயற்சியும் அடியோடு குலைந்து போகிறது சில மனிதர்களாலும் அவர்தம் வார்த்தைகளாலும்
இருப்பினும் பூவியீர்ப்பின் விசையைத் தாண்டியே சாத்தியப்படும் நிலவிற்கான பயணம்!
The destiny can be moon only when you break the earth's gravitational barriers amidst negative people and words!


--------------------------------------------------------------------------------------
நித்திரையில் மூழ்கும் நேரம்
சித்திரையை வரவேற்க
வந்தது கோடை மழை,
பெரும் கொடையாய் வாசலில்!
மழையெனும் கவிதையுடன்
மலரட்டும் புத்தாண்டு அனைவருக்கும்!
------------------------------------------------------------------------------------------------------------------


தன் நிலத்தில் உழுது ஊருக்கு உணவு தரும் சிறு விவசாய முதலாளியிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கி, நாடு நாடாய் சென்று நிலம் இருக்கிறது, வளம் இருக்கிறது, குப்பைக் கொட்ட இந்திய நாடு இருக்கிறது, நிலத்தைப் பிடுங்கி நீரை உறிஞ்சி, மொழியை நசுக்கி, மதத்தை வளர்த்து, தண்ணீருக்காக அடித்துக் கொண்டு, ஏற்கனவே பராரியாய் ஆகிக்கொண்டிருக்கும் மலிவானக் கூலிகள் இருக்கின்றனர் என்று கொஞ்சம் கொஞ்சமாய் நாட்டைக் குத்தகைக்கு விட்டுக் கொண்டிருக்கும் அரசை விட்டு விட்டு,
சாதி மறுத்து, கடவுள் மறுத்து, சம்பிரதாயங்கள் மறுத்து, பெண்களுக்குக் குரல் கொடுத்து என்று முதிய வயதிலும் மூத்திரப் பையைச் சுமந்து கொண்டு சேவை செய்த ஒரு பெரியவரின் படத்தில் மூத்திரம் அடிக்கத்தான் உங்களுக்குத் துப்பு இருக்கிறது..........
சேவை செய்த ஈ.வே.ரா என்ற பெரியாரை விட, சேவை செய்து கொண்டிருக்கும் எண்ணற்ற பெரியவர்களை விட, உங்களுக்குப் பெண்ணையும் பொன்னையும் பறிக்கும் சாமியார்களையும், தொட்டால் தீட்டு என்று ஒதுங்கிச் செல்லும் பெரியவாளையும் தானே பிடிக்கும் அப்ரெண்டீஸ்களா!
feeling annoyed.
----------------------------------------------------------------------------------------------------------
 
ஐயமின்றிக் கொள்ளும் ஓர் அதித நம்பிக்கையே காதல்!
------------------------------------------------------------------------------------------------------------
மறுக்க முடியாத ஆதாரத்துடன் கூடிய உண்மையென்று காலமும் சூழ்நிலையும் எத்தனை முறை உணர்த்தினாலும், சில உண்மைகள் பொய்யாய் இருக்க வேண்டுமென விரும்புகிறது மனம்!
‪#‎உண்மைகள்‬ உவப்பாய் இருப்பதில்லை பல நேரங்களில்!
-----------------------------------------------------------------------------------------------------------
தெரியாதென்பது தொடக்கம்
முயற்சிக்க நினைப்பது ஆக்கம்
தொடங்கி முயல்வது முன்னேற்றம்
தோல்வியிலும் துவளாமல் இருப்பது ஊக்கம்
முடியாது என்று முடங்கிப் போவதே (முடிவு) முற்றும்!
-----------------------------------------------------------------------------------------------------------------
உலகும் சுற்றும் வாலிபன், அதே (கேமரா) கண்கள்! - ‪#‎பிரதமர்‬
ஊர் ஊரா போய் காமெராவை மட்டும் கரெக்டா கண்டுபிடிச்சிடுறார்! 
------------------------------------------------------------------------------------------------------------
பிரதமரின் அடுத்த நேர்காணலை விரைவில் எடுக்கப் போவது பேஷன் டிவி தான்...

‪#‎பிரபலம்‬
-----------------------------------------------------------------------------------------------------------------------

தருவதற்கும், மறுப்பதற்கும் உள்ள மனதின் இடைவெளியே, ஒன்றை செய்வதற்கும் , சோம்பி, சோர்ந்து செய்யாமல் தவிர்ப்பதற்கும் இடையேயும் உள்ளது!
எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரம்தான், மனங்கள் மட்டுமே குரங்கின் வகைகள்
----------------------------------------------------------------------------------------------------------------
எளிதாய் கிடைத்துவிடும் எதுவும் மலிவாய்த் தெரிகிறது!
-----------------------------------------------------------------------------------------------------------------
 
 


 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!