Thursday 21 April 2016

எனக்கென்ன?

மொத்தமாய் கொட்டிய மழைநீரை
குடிநீராய்
சேர்த்து வைக்கத் தெரியவில்லை,
அதை சவநீராய் ஆக்கிக்கொண்டோம்,
இப்போது வறண்ட பூமிதனில்
வெயிலிலும் வாடிச் சாகிறோம்!

வற்றாத ஜீவநதிகள் என்றாலும்,
அதில் பிணங்களை வீசி
மோட்சம் தேடுகிறோம்
சொட்டு நீரில்லாமல்
மறுபக்கம்
தானாய் மோட்சம் அடைகிறோம்!
சுவைக்காக உண்டு
அது செரிக்க
வாயு பானம் வேண்டி
குடிநீரையும் தானாமாக்கினோம்
பின் உயிர் தாகம் தீர்க்க
ஒரு சொட்டு நீருக்கும்
தவித்துப் போகிறோம்!
மரம் வெட்டினால் என்ன
காடழித்தாலும் என்ன
மணற் கொள்ளையடித்தால் என்ன
ஆலைகள் நீர் உறிஞ்சினால் என்ன
கனிமங்களைச் சுரண்டினால் என்ன
சாயக்கழிவுகள் கலந்தால் என்ன
என்ன என்ன
எனக்கென்ன என்று
இருந்துக் கொண்டோம்
அப்படித்தான் இருக்க வேண்டுமென
நிறுத்தப்பட்டோம்!
நேசித்த ஒருவரின்
மரணத்தில் பொங்கும்
வெற்றுக் கருணையைக் கூட
காட்டவில்லை நாம்
இயற்கையை அழித்தப்போதும்!
நம்மை காக்க பூமி காக்க
இயற்கை காக்க வேண்டும்
அட அதற்கு
இனியேனும் போரிட வேண்டும்
‪#‎எனக்கென்ன‬ என்ற மனதிடம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!