Thursday 21 April 2016

மனது



நினைப்பது எதுவோ
நடப்பதும் அதுவே
விதி வழியது
வாழ்க்கையுமில்லை
கெடுமதியது
வாழ்வதுமில்லை


எண்ணங்களைச் சிதறவிட்டு
தீர்க்க முடிவது ஏதுமில்லை
எண்ணங்களில்
நம்பிக்கைக் கொண்டால்
தீராததுமில்லை

வணங்கும் கடவுளர்கள்
இதைச் சொல்ல வருவதுமில்லை
உள்ளிருக்கும் ஒன்றை
உண்மையென்று மனிதம்
அறிவதுமில்லை

கால்களை மறந்து
தூரத்தை அளந்து பயணமில்லை
எப்போதும் நிழலை
துணையென நினைத்தால்
வாழ்வில் முன்னேற்றமில்லை

நினைப்பது எதுவோ
நடப்பதும் அதுவே
இதில் ஆன்மீகமில்லை
அறிவியலுக்கு வசப்படாத
மனிதனின் மனது
வெறும் குப்பைக் கூளமில்லை!
‪#‎மனது‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!