Thursday 21 April 2016

சதுரங்கம்‬!

#‎அணுக்கதை‬:
அந்த நகராட்சியில் இருந்த மாபெரும் குடிநீர் ஏரியில், ஒரு நகரத்தின் மொத்த சாக்கடைகளைச் சேர்க்கும் பணிக்காக எண்ணூறு கோடி ஒதுக்கப்பட்ட செய்தி கேட்டு, அந்தத் தெருவில் குடியிருந்த சேகர் கொதித்தார், "இருக்குற ஒரே ஏரியை இப்படியா செய்வார்கள்? நாமாவது ஏதேனும் செய்தாக வேண்டும்" என்று புலம்பிய அவர், மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்த, வளர்ந்து வரும் போராட்டத்தின் வீரியத்தைக் கண்டு, அதிகாரிகள் காயை நகர்த்த, அடுத்த நாள் சேகர் பாக்கெட்டில் இரண்டு கஞ்சா பொட்டலங்களோடு கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்!
‪#‎சதுரங்கம்‬!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!