Thursday 16 April 2020

தலைமுறைச்சாபம்!

இந்த மௌனம்தான்
எவ்வளவு அழகாய் இருக்கிறது
என்றான்
வார்த்தைகளை பறித்துக்கொண்டு

இந்த அடக்கம்தான்
எத்தனை உயர்ந்தது
என்றான்
சுதந்திரத்தை நசித்துவிட்டு

இந்த பொறுமைதான்
என்னை கவர்கிறது
என்றான்
சிறகுகளை பிய்த்துவிட்டு

இந்த கருணைதான்
என்னை தக்கவைக்கிறது
என்றான்
ஏளனம் செய்துவிட்டு

இந்த அறிவுதான்
என்னை வியக்கவைக்கிறது
என்றான்
சுயத்தை கொன்றுவிட்டு

அத்தனையும் கேட்டிருந்த
கூண்டுக்கிளி
இனி உன் வம்ச கூட்டுக்குள்
கிளிகளே இல்லாது
போகட்டுமென்று சாபமிட்டு
படபடவென இறக்கைகளையடித்துக்கொண்டு
செத்து வீழ்ந்தது!
#தலைமுறைச்சாபம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!