Wednesday, 15 April 2020

ஆண்சமூகமும்_ஆணுறுப்பு_குற்றங்களும்

ஆண்சமூகமும்_ஆணுறுப்பு_குற்றங்களும்

சோமலியாவின் நீதிபதி வன்கொடுமை செய்தவர்களின்
பிறப்புறுப்பை அறுத்தது போல்
நாச்சியார் படத்தில் ஆணுறுப்பை கதற கதற செயலிழக்க செய்தது போல்
நிர்பயா தொடங்கி, ராஜலட்சுமி, ஹாசினி, ஆசிபா, சுவாதி, பொள்ளாச்சியின் 7 ஆண்டுகால கொடுமைகள், மற்றும் இன்னமும் கிராமங்களில் பெருநகரங்களில் வளர்ந்து, இன்று கோவையில் 7 வயது குழந்தையின் கொலை வரை ஒருவருக்கும் நம் சட்டம் மரணத்தண்டனை தந்ததில்லை, எப்போதோ அக்காவாகிய சிறுமியை சீரழித்து அவளையும் உடன் தம்பியையும் கொன்ற வாகன ஓட்டுநனனை என்கவுண்டரில் கொன்றார்கள், பின்பு சுவாதியை கொன்றதாய் ஒரு ராம்குமாரை அவசரமாய் முடித்துவைத்தார்கள், மற்றவர்களுக்கு தையல் இயந்திரம் கொடுத்தார்கள், சாட்சிகள் இருக்கிறதா என்று ஒரு முதல்வரே எக்களமிட்டதும் வரலாற்றில் விழுந்த கறைகள்! 


அயனாவரம் பெண் குழந்தை வழக்கில் அந்தக்குழந்தையே இறந்துவிட்டது, ஆனால் குற்றவாளிகள் இன்னமும் வழக்கு வாய்தாவில்! மும்பையில் பள்ளி விட்டு வீடு திரும்பிய சிறுமியை, எதிர்வீட்டில் மனைவி பிரசவத்திற்கு சென்றுவிட, அந்த வீட்டில் இருந்தவன் அந்தச்சிறுமியை அவர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து, எழுதக்கூசும் அளவுக்கு படாதபாடு படுத்தி பின் அந்தச் சிறுமியை குற்றுயிராக மீட்டிருக்கிறார்கள்!

முன்னமே எழுதியதுதான், ஆட்சியாளர்கள் தொடங்கி காவல்துறை, நீதித்துறை வரை பெரும்பான்மை ஆண்களே, இவர்கள் பெரும்பாலும் பெண்களுக்கு பாடமெடுப்பதற்கு காரணம் அவர்களுக்கும் தறுதலையாய் சில ஆண்பிள்ளைகள் இருக்கலாம் என்பதே, மனுநீதி சோழனை அல்ல நாம் மனிதர்களைக்கூட பார்ப்பது அரிதாகிவிட்டது இந்தியாவில்!

காட்டுமிராண்டிகளாய் இவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் புசிக்க, என் மயிருக்கு என்ன வந்தது, யாரோ யாரோ என்று இளித்துக்கொண்டு வரும் அரசியல்வாதிகளுக்கு நாம் ஓட்டுப்போடுவோம், இத்தனை குற்றங்களுக்கும் பிரதானமாய் விளங்கும் சாராய வியாபாரத்தை கச்சிதமாய் வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு நாள்தோறும் குடித்தழிந்து ஆதரவாய் இருப்போம், வேறென்ன போங்கள், ஆண்களை தறுதலையாகத்தான் வளர்ப்போம், சாராயக்கடைகள ஊக்குவிப்போம், வடக்கில் இருந்து குற்றவாளிகளை இறக்குமதி செய்வோம், உள்நாட்டில் பள்ளிகள் அழித்து குற்றவாளிகளை உருவாக்குவோம், போராட்டம் செய்தால் மட்டும் ஸ்னைப்பர் குண்டுகளை பரிசளிப்போம், பாலியல் குற்றவாளிகளை அரவணைப்போம், பிறகு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அத்தனை பற்களையும் காட்டிக்கொண்டு உணர்ச்சிப்பொங்க அரசியல் பேசுவோம்!

சில ரூபாய்களுக்கு ஓட்டை விற்கும் பதர்களுக்கு பெண் குழந்தைகளின் வேதனை புரியாது! இனி #பெண்கள் பிறக்காமல் இருக்கட்டும் இந்த ஆணாதிக்க தேசத்தில்! தூ!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...