Wednesday 15 April 2020

கடவுள் ஒன்றுதான்

மைதானத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது,
“டேய் சாமிகிட்ட வேண்டிக்கடா”
“நோடா நாங்க முஸ்லீம்டா”
“சோ வாட் டா?”
“முஸ்லீம் இந்து சாமியை கும்பிடக்கூடாதுடா!”
“ஓ முஸ்லீம்னா கும்பிடக்கூடாதா? பட் எல்லாரும் சாமிதானேடா?!”
“சரிடா” என்றவன் திரும்பிக்கோவிலை பார்த்துவிட்டு நகர்கிறான்!

சலசலவென்று பேசிக்கொண்டே தோளில் கைப்போட்டுக்கொண்டுச்சென்ற கும்பலில் இருந்த இரு குழந்தைகளுக்கும் வயது 6ல் 8க்குள் தான் இருக்கும், அவர்களுக்கு மதம் மெதுவாய் போதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது, இருப்பினும் நட்பு மதத்தை தோற்கடிக்கிறது என்பதுதான் அழகு! கடவுள் ஒன்றுதான், வழிபடும் முறை மட்டுமே வேறு என்று பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்குமா சமூகம்?! ❤️

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!