Thursday, 16 April 2020

பெண்ணெனும்_பொருள்!

#பெண்ணெனும்_பொருள்!
ஆக கடைசிவரை எந்தக்குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்துக் கொன்றாலும், எத்தனைப்பெண்களை கூட்டு வன்புணர்வு செய்துக் கொன்றாலும், கடுமையான தண்டனை குற்றவாளிகளுக்கு இல்லை? ஆண்களின் வளர்ப்பில், சமூக பாதுகாப்பில், கல்வியில் எந்த மாற்றமும் இல்லை? எந்தக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலும் இது இல்லை! மொத்தத்தில் “ஆடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்ற காலத்திற்கு இட்டுச்செல்கிறார்கள் ஆட்சியாளர்களும், நீதி நெறியாளர்களும்!

பெண்களுக்கு இலவசமாய் மிக்ஸியும், கிரைண்டரும், ஸ்கூட்டரும் தருவார்கள், மற்றபடி கல்வி, சமூக உரிமை, பாதுகாப்பு இதெல்லாம் கேட்கவே கூடாது, கவர்னர் கன்னத்தை கிள்ளூவார், அமைச்சர் பெண்ணை ஏமாற்றி பிள்ளைப் பெற்றுக்கொள்வார், கட்சி சார்ந்த சில மடையர்கள் பெண்களை அசிங்கமாக சித்தரிப்பார்கள், அரசியல்வாதிகளின் ஆதரவில் அவர்கள் வாரிசுகள் பெண்களை நசித்து படம் எடுப்பார்கள், சாதிச்சங்கங்களின் தயவில் கொழுத்தவன், இளைத்தவனின் பெண்களை வெட்டிக்கொல்வான், சாதிப்பெயரில் நீரில் கூட தீண்டாமை கொண்டு குழந்தைகளை கொல்வார்கள், உயிரை காப்பாற்றிக்கொள்ள பாலியல் வக்கிரங்களில் பெண்கள் போராடக்கூடாது என்று அமைச்சர் சொல்வார், ஊரே ஆதாரங்களை சமர்பித்தாலும், ஆதாரம் இருக்கிறதா என்று அமைச்சர் கேலி செய்வார், தனியே வெளியே வந்தால் கொல்வார்கள், வீட்டில் இருந்தாலும் கொல்வார்கள், ஆடையோடு இருந்தாலும் கொல்வார்கள், ஆடையற்று பிறக்கும் குழந்தையையும் புசிப்பார்கள், இப்படி தொடர்ந்து நடக்கும் எதற்கும் இன்று வரை பதிலில்லாத நிலையில், தொடர்ந்து மிக்ஸிக்கும் கிரைண்டருக்குமாக, சில ஆயிரம் ரூபாய்களுக்காக ஓட்டுப்போட வேண்டுமா என்று பெண்கள் யோசிக்க வேண்டும், ஓட்டுக்கேட்டு வரும்போது, வாக்காளர்களிடம் கேள்விக்கேட்காமல் பணத்தை எதிர்ப்பார்த்து நின்றால் பெண்களுக்கு மரியாதை மட்டுமல்ல, பிறக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்புமில்லை!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...