Thursday 16 April 2020

காட்டுத்தர்பார்

#காட்டுத்தர்பார்
குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் ஆளும் கட்சி அதன் கூட்டணி கட்சிகளும் லாயிட்ஸ் ரோடில் அணிவகுத்திருக்கிறார்கள், ஆளுக்கு ஒரு கொடியை வண்டியில் கட்டிக்கொண்டு வெள்ளை சட்டையில் இருசக்கர வாகன ஓட்டிகள் யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று வண்டியை ஆங்காங்கே நிறுத்தி வைக்க, ஓரே ஒரு காவல்துறை அதிகாரி போக்குவரத்தை சீர்செய்ய, நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை தானே சிரமப்பட்டு தள்ளி வைக்கிறார், பள்ளிக்கு தாமதமாகும் பதட்டம் வண்டிகளின் ஹாரன் ஒலியில் காதை அறைகிறது!
இங்கே இருக்கும் பிரச்சனை ஒன்றுதான், கட்சி கொடியை கட்டிக்கொண்டால் படித்தவன், படிக்காதவன், ரவுடி, இத்யாதி இத்யாதி என எல்லோருக்கும் ஒரு திமிர்த்தனமும் அலட்சியமும் வந்துவிடுகிறது, ஒரு சாதாரண கட்சியின் அடிமட்ட தொண்டனை கூட கேள்வி கேட்கவோ அதட்டவோ திராணியில்லாமல் நம் காவல்துறை இருக்கிறது, அடிமட்ட தொண்டர்களே காவல்துறைக்கு மரியாதை தராத போது இந்த அமைச்சர்களிடம் இந்த அதிகாரிகள் என்ன பாடுபடுவார்கள்?
குறைந்தபட்சம் மக்களுக்கு இடையூறில்லாமல் வாகனங்களை நிறுத்தக்கூட தெரியாத இந்த அரசுதானா மீத்தேன், அணுவுலைகளின் ஆபத்தையுணர்ந்து மக்களின் பாதுகாப்புக்கு மெனக்கெடப் போகிறது? தமிழகத்திற்கு விடிவு காலம் எப்போது?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!