Tuesday 8 November 2016

காதல்



அந்த மழைநேரத்து மாலையில்
அமிருதவர்ஷினி இசைத்த நீதான்
மயங்கியப் பொழுதில்
சகானாவில் காதல் இயம்பினாய்
கம்பீரம் இழந்த அட்டானவில்
அவ்வப்போது கோபமும் சோகமுமாய்
வரலியும் சிவரஞ்சனியும் நாட்டியமாட
பூபாளத்தின் விடியலை எதிர்நோக்கியது
மனது
ராகங்கள் இப்போதும் மனதில்
இசைக்கிறது
கருணையற்ற உன் அமிருதவர்ஷினியோ
மேகங்களிடம் தோற்று
என் கண்களில் வெல்கிறது
கல்யாணியின் ஆலாபனையில்
ஆனந்தபைரவியின் நினைவுச்சாரலில்
அந்த மழைநேரத்து மாலையில்
சஞ்சரிக்கும் காதலை
நீ மீட்டெடுக்கும் பொழுதில்
அமிருதவர்ஷினியை
நாம் சேர்ந்திசைக்கலாம்!


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!