Tuesday 29 August 2017

கீச்சுக்கள்

"மத்திய"ஸ்தராக வடிவேலு;
"டேய் பூரா பயலுகளும் கொஞ்ச நாள் ராணிய வெச்சு, போலீஸ் திருடன் விளையாட்ட அமைதியா வெளாண்டிங்கல்லே, இப்போ அதமாதிரி, முதலமைச்சர் வேஷத்த ஆளுக்கு ரெண்டுமாசம்ன்னு பிரிச்சுக்கிட்டு, சத்தம் போடாம அங்கிட்டு ஓரமா போய் வெளாண்டுக்கங்க, இல்லேன்னா ஆட்டத்தக் கலைச்சிடுவேன், பாத்துக்க, ஷ்ஷப்பாஆஆஆஆஆ இப்பவே கண்ணக்கட்டுதே, பூராவும் எமகாதக பயலுகளா இருக்குதுங்க!" 😱

********************************************************************


செந்தில்;
அண்ணே, இந்த ஒபிஎஸ் இபிஎஸ் சேர்ந்து நடத்தப்போறது, காவிரி மீட்புப் போராட்டமா, நீட் தேர்வு ரத்து பண்றதா? தஞ்சைய மீட்கறதா? கூடங்குளத்தை மீட்கும் படலமா? விவாசாயிகளின் கடன தள்ளுபடி செய்யப்போறாங்களா? சாராயக்கடைகளை மூடுற போராட்டமா? இல்லைன்னா தமிழ் மொழி காக்குற அறப்போராட்டமா? சொல்லுங்கண்ணே
கவுண்டமணி;
டேய், உன் வீட்டு குழாயுல தண்ணி வந்துச்சா? வரலைன்னா என்ன செய்வே? இந்த அரசியல்வாதிக செய்யப்போறது கட்சி மீட்பு, கடைசிவரைக்கும் அதே மெரீனா மர்மம், அதே சொத்துக்குவிப்பு, இதுக்கா இத்தனை பில்டப்பு? போ நாயே, குண்டக்க மண்டக்க கேள்விக்கேக்கறத விட்டுட்டு போ, பக்கத்துத்தெருவிலே போய் இரண்டு கொடம் தண்ணிய எடுத்துட்டு வா!





***************************************

ஆளுங்கட்சியில் கவுண்டமணி;
"டேய் சும்மா சும்மா பிரச்சன பிரச்சனைன்னு கத்தாதீங்கடா, காவிரியில வர வேண்டிய தண்ணிய எதிர்கட்சிதான் தடுத்துது, நேத்து என் வீட்டுல கரண்ட் வராதத்துக்கும் எதிர்கட்சிதாண்டா காரணம், நான் பிரதமருக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சரிபண்ணிடுறேன், ஆ சரிங்க மக்களே உங்க பிரச்சனைக்காக நான் டெல்லிப் போறேன்..ஆ வணக்கமுங்கோ!"
கூட்டத்தில் இருந்து வடிவேலு;
"அடேய் நாதாரிப்பயலுகளா, என் வெள்ள வேட்டி வென்று, அவன் செய்யலைங்கறதாலதான் நீ ஆளுங்கட்சி, நீ எப்படி இதைச் செய்யப்போறேன்னு சொல்லு, அவனையே கைகாட்டிக்கிட்டு இருக்கறதுக்கு நீ எதுக்கு ஆட்சியிலே? முடியலைன்னா ராஜினாமா பண்ணிட்டுப் போடா என் டுபுக்கு"

கவுண்டமணி; டேய் நாராயாண இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியல, அத அடிச்சுக்கொல்லுங்கடா...ஆஆ...சரிங்க மக்களே இதையெல்லாம் நம்பாதீங்க, இதெல்லாம் எதிர்கட்சியோட சதி, மழைக்காலம் வரப்போகுது, மக்கள் எல்லாம் மூழ்காம இருக்கறதுக்கு நாங்க தெர்மாக்கோல் கொடுக்கப்போறோம், நான் உடனே போக வேண்டியிருக்கு, நான் உத்தரவு வாங்கிக்கிறேன்!
வடிவேலு: அண்ணே போங்கண்ணே, எங்களுக்கு தெர்மாக்கோல கொடுத்துட்டு, நீங்க அப்படியே மாட்டுவண்டி புடிச்சுப் போனீங்கன்னாஆஆ..அப்படியே டெல்லி வந்துடும்ண்ணே..ஹி ஹி ஹி..அண்ணே ஓடாதீங்கண்ணே, டெல்லியில நம்ம தலைவருக்கு குச்சிமுட்டாய் வாங்கீட்டு போங்கண்ணே!

******************************************

 


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!