Wednesday 16 August 2017

அன்பும்_மழையும்



அன்பையும் மழையையும்
அலட்சியப்படுத்துகிறோம்
நம் சுயநலக் காரியங்களுக்காக
தூற்றுகிறோம்
பின்பொரு பாலைநிலத்தில்
நின்றுகொண்டு
வெற்று இதயக்கூட்டை
சுமந்துகொண்டு
அப்போதும் நம்
சுயநலத் தாகம் தீர்க்க
வேதனைச் சுமந்து மறைந்த
அன்பையும்
பொய்த்துப்போன மழையையும்
வா வா என்றழைக்கிறோம்
கரைந்துருகும்
தாய்மையைப்போல்
குற்றம் மறந்து வருகிறது
மழை
மீண்டும் மீண்டும்!
எப்போதும் தூற்றும்
மாறாத
மனித இயல்பில்
அன்பும் மழையும் மட்டும்
மாறுவதேயில்லை
காலங்கள் கடந்தும்!

#அன்பும்_மழையும்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!