Wednesday 16 August 2017

மழை



வேண்டுமா வேண்டாமா
என்று கேட்பதில்லை
இவ்வளவா அவ்வளவா
என்ற கணக்கில்லை
நேசிக்கிறாயா வெறுக்கிறாயா
என்ற பேதமில்லை
எப்படியும்
எந்தநேரத்திலும்
வரும் மழைக்கு!

மழையைப்போலச்
சில மனிதர்கள்
வாழ்தலின் பொருட்டு
பெய்யெனப் பெய்கிறது
மழை,
ஊற்றேன வாழ்விக்கிறது
அன்பு!!!
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!